sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர்கள் கைது மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

/

மீனவர்கள் கைது மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்


ADDED : மார் 18, 2025 08:24 PM

Google News

ADDED : மார் 18, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதுடன், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால், அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களின் குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில், 110 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதுடன், இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க, வலுவான துாதரக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us