sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சோழர் அருங்காட்சியகம் முதல்வர் பெருமிதம்

/

சோழர் அருங்காட்சியகம் முதல்வர் பெருமிதம்

சோழர் அருங்காட்சியகம் முதல்வர் பெருமிதம்

சோழர் அருங்காட்சியகம் முதல்வர் பெருமிதம்


ADDED : ஜூலை 24, 2025 12:39 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறை சாற்றும் அருங்காட்சியகம், காண்போரை கவர்ந்திடும் வண்ணம் எழுந்து வருகிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு:

கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என, பெரும் புகழ் எய்திய தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை, அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாட, 2021ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது தி.மு.க., அரசு.

ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக, அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரை கவர்ந்திடும் வண்ணம், அது எழுந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ராஜேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும் என, அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us