ADDED : டிச 26, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வாஸ்கோடகாமாவில் இருந்து சிறப்பு ரயில் (07375) நேற்று மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு இன்று மதியம் 2:00 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறுமார்க்கத்தில் (07376) இன்று மாலை 4:00 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாளை மாலை 4:10 மணிக்கு வாஸ்கோடகாமா செல்கிறது.
மட்கான், கார்வார், கும்டா, ஹொன்னாவர், முர்தேஷ்வர், மூகாம்பிகை சாலை பைந்துார், குடாச்சி, உடுப்பி, சுரத்கல், மங்களூரு, காசர்கோடு, கண்ணுார், கோழிக்கோடு, ஷோரனுார், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.

