sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாம்சங் துணை கம்பெனி பக்கம் திரும்பிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

/

சாம்சங் துணை கம்பெனி பக்கம் திரும்பிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

சாம்சங் துணை கம்பெனி பக்கம் திரும்பிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

சாம்சங் துணை கம்பெனி பக்கம் திரும்பிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

5


ADDED : அக் 18, 2024 12:53 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:53 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அமைப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி, 37 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசுக்கு கடும் நெருக்கடியை அளித்து வந்த இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, பல கட்ட பேச்சு நடந்தது. இருப்பினும், போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான பேச்சுக்கு பின், வேலைநிறுத்தப் போராட்டத்தை, சி.ஐ.டி.யு., 15ம் தேதி முடித்துக் கொண்டது.

சாம்சங் தொழிலாளர்கள் வழக்கம்போல நேற்று பணிக்கு திரும்பினர்.

சாம்சங் போராட்டம் துவங்கும் முன், காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமத்தில் இயங்கும் எஸ்.எச்.இந்தியா தொழிற்சாலையில், சி.ஐ.டி.யு., வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

சாம்சங் தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் தயாரித்து தரும் இந்த தொழிற்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் துவங்கப்பட்டது.

இங்கு, நிரந்தர தொழிலாளர்கள் 94 பேரும், பயிற்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 400 பேரும் பணியாற்றி வந்தனர்.

நான்கு மாதங்களுக்கு முன், தொழிற்சாலையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அமைக்க வேண்டும் என, 12 நிரந்தர தொழிலாளர்கள் முடிவு செய்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த விவகாரம், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனால், 12 பேரையும் தொழிற்சாலை நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது. இதனால், அதிருப்தியடைந்த நிரந்தர தொழிலாளர்கள் 90 பேர், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். நேற்றுடன் 121வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் முத்துகுமார், நீர்வள்ளூரில் நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று பங்கேற்றார். அவர்களுடன் பேசி, போராட்டத்தை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் போராட்டம் நடத்தும் 90 தொழிலாளர்களையும், தொழிற்சாலை நிர்வாகம் சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சிக்கு வந்த தொழிலாளர்கள் ஆகியோரது துணையுடன், தொழிற்சாலை நிர்வாகம் உற்பத்தியை தொடர்கிறது.

சஸ்பெண்ட் செய்த தொழிலாளர்களை பணிக்கு சேர்ப்பது மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி, மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த சி.ஐ.டி.யு., முடிவு செய்துள்ளது.

அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய சாம்சங் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், அடுத்ததாக எஸ்.எச்., இந்தியா தொழிற்சாலை போராட்டத்தை தீவிரபடுத்த சி.ஐ.டி.யு., முடிவு செய்துள்ளது.

பேரவை கூட்டத்தில்@விவாதித்தது என்ன?@


காஞ்சிபுரத்தில் 16ம் தேதி, தனியார் திருமண மண்டபத்தில் சி.ஐ.டி.யு., பேரவை கூட்டம், மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டச் செயலர் முத்துகுமார், மாநில நிர்வாகி கோபிகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிற்சாலை தொழிலாளர்கள் என, 700 பேர் பங்கேற்றனர்.
இதில், சாம்சங் தொழிற்சாலை போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், போலீசார் தந்த நெருக்கடி பற்றியும், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.சாம்சங் தொழிற்சாலையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அது பற்றி பெரிய அளவில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.



இப்போதைக்கு வேலைக்கு வர வேண்டாம் இ- -- மெயிலில் தகவல் அனுப்புவோம்


சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை முடிவுக்கு வந்ததாக அரசு அறிவித்த நிலையில், 'போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இப்போதைக்கு வேலைக்கு வர வேண்டாம்; இ - மெயில் வாயிலாக தகவல் கிடைத்த பின், வேலைக்கு வந்தால் போதும்' என, நிர்வாகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, சாம்சங் சி.ஐ.டி.யு., தலைவர் முத்துகுமார் கூறியதாவது:தொழிற்சாலை நிர்வாகத்தினர் குழு அமைத்து, தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. அமைச்சர்களுடனான பேச்சில், அதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.இதையடுத்து, தொழிலாளர்களிடம் கோரிக்கை குறித்து பேசுவது, எழுத்துப்பூர்வமாக கடிதம் அளிப்பதற்கு, சாம்சங் நிர்வாகம் ஒப்புக் கொண்டது.மேலும், பணிக்கு திரும்பும்போது, நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; நிர்வாகத்தினருக்கு தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது; நிர்வாகமும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களுக்கு தேவையான சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.
இதனால், சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சாம்சங் போராட்டத் தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது குறித்து, கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மீண்டும் பணிக்கு திரும்ப ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று பணிக்கு திரும்பிய தொழிலாளர்களிடம், இன்று முதல் உங்களை மீண்டும் பணிக்கு சேர்த்துள்ளதாகவும், ஒரு வார பயிற்சிக்கு பின் பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க, 1,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளதாகவும். அவர்களை படிப்படியாக குறைத்து, மறு வேலை நேர அட்டவணை தயார் செய்யப்படும் என்றும், அதன்படி நீங்கள் பணிக்கு வர வேண்டிய தேதி விபரம், இ- - மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us