sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

/

நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்


ADDED : பிப் 08, 2025 11:20 PM

Google News

ADDED : பிப் 08, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தினர், சென்னை எழும்பூரில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சம்மேளன தலைவர் தமிழரசு கூறியதாவது:

தமிழகத்தில், 128 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் தனித்தனியே நிர்வாகம் செய்யப்படுகிறது. எனவே, 10 - 12 வங்கிகளை ஒன்றிணைத்து, ஒரு மண்டலமாக உருவாக்க வேண்டும். இதனால், நிர்வாக செலவு குறையும்.

கடந்த, 2022 ஜனவரி முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதன்படி, 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதை கணக்கீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளால், 9.75 சதவீதம் தான் ஊதிய உயர்வு கிடைக்கிறது. இதை சரிசெய்ய வேண்டும்.

நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோருக்கு, மற்ற வங்கி ஊழியர்களை போல ஓய்வூதியம் வழங்க வேண்டும். வங்கிகளை தரம் பிரிக்காமல், அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், 16 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், மார்ச் 17ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us