sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஜெயக்குமார் இறப்பு வழக்கில் போலீஸ் தரப்பு விளக்கம்

/

விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஜெயக்குமார் இறப்பு வழக்கில் போலீஸ் தரப்பு விளக்கம்

விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஜெயக்குமார் இறப்பு வழக்கில் போலீஸ் தரப்பு விளக்கம்

விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்: ஜெயக்குமார் இறப்பு வழக்கில் போலீஸ் தரப்பு விளக்கம்

8


ADDED : மே 13, 2024 05:20 PM

Google News

ADDED : மே 13, 2024 05:20 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லை: காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கை, சந்தேக மரணம் என்ற ரீதியில் விசாரித்து வருவதாகவும், கொலையா தற்கொலையா என தற்போது முடிவு செய்யவில்லை, விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும் என தென்மண்டல ஐ.ஜி கண்ணன் கூறியுள்ளார்.

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயக்குமார் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது. அவரது வயிற்றில் 15 * 50 செ.மீ கடப்பா கல் கட்டப்பட்டு இருந்தது. முதுகு பகுதிகள் எரியவில்லை என இடைநிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொலையா, தற்கொலையா என எதுவும் சொல்லவில்லை. ஜெயக்குமார் கொலை என இதுவரை முடிவு செய்யவில்லை. அவரது உடல் அருகே டார்ச்லைட் கண்டெடுத்துள்ளோம்.

சந்தேக மரணம் என்ற ரீதியில் தான் விசாரித்து வருகிறோம்; விரைவில் முடிவு கிடைக்கும். ஜெயக்குமாரின் கடிதம் குறித்து அறிவியல்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் கடிதத்தில் இருந்த கையெழுத்து அவருடையதுதான் என உறவினர்கள் கூறியுள்ளனர். அதில் மிகைப்படுத்தப்பட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுவரை 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவாக 10 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us