sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மர்ம நபர் தாக்கி மாணவர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

/

மர்ம நபர் தாக்கி மாணவர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

மர்ம நபர் தாக்கி மாணவர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

மர்ம நபர் தாக்கி மாணவர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு


ADDED : செப் 11, 2011 11:41 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராமநாதபுரத்தில் மர்ம நபர்கள் தாக்கி இறந்த மாணவர் பழனிக்குமார் குடும்பத்திற்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ளார். ராமநாதபுரம், பச்சேரியைச் சேர்ந்த தங்கவேல். இவரது மகன் பழனிக்குமார்; அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், முத்துராமலிங்கபுரத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, 9ம் தேதி இரவு வீடு திரும்பும்போது, சில நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாணவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மாணவர் பழனிக்குமாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us