sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எளிய பின்புலங்களில் இருந்து சாதிப்பவர்களின் வெற்றியில் பெருமை கொள்ளும் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

/

எளிய பின்புலங்களில் இருந்து சாதிப்பவர்களின் வெற்றியில் பெருமை கொள்ளும் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

எளிய பின்புலங்களில் இருந்து சாதிப்பவர்களின் வெற்றியில் பெருமை கொள்ளும் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

எளிய பின்புலங்களில் இருந்து சாதிப்பவர்களின் வெற்றியில் பெருமை கொள்ளும் தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

7


ADDED : அக் 26, 2025 03:45 PM

Google News

7

ADDED : அக் 26, 2025 03:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, 'உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?' என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகாவும், அபினேஷூம் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

நேற்று நான் பைசன் படத்தில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்கத்தின் பெருமை கொள்கிறது, இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.






      Dinamalar
      Follow us