சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை; வானிலை மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை; வானிலை மையம் தகவல்
ADDED : அக் 26, 2025 01:54 PM

சென்னை: தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக் 26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
நாளை (அக் 27) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
நாளை (அக் 27) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
நாளை மறுநாள் (அக் 28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
நாளை மறுநாள் (அக் 28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

