sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

/

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு


ADDED : டிச 10, 2024 01:57 PM

Google News

ADDED : டிச 10, 2024 01:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.



சென்னை, சட்டசபை வளாகத்தில் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அ.தி.மு.க., மீது குறை கூறி திசை திருப்பும் செயலில் தி.மு.க., ஈடுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கும் வேண்டுமானாலும் சுரங்க உரிமை கொடுக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பித்துரை தெரிவித்தார். தமிழகத்தில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

100 நாட்கள்

முன்னதாக, சட்டசபையில், கூட்டத்தொடர் குறித்து, பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் இ.பி.எஸ்., குறிப்பிட்டார். அவர் பேசியதாவது: குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது; மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு, 100 நாட்கள் சபை கூட்டம் என்று கூறியிருந்தனர். அப்படி பார்த்தால், 400 நாட்கள் கூட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால், 119 நாட்கள் தான் கூட்டம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us