sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி அமைச்சராக்க கவர்னருக்கு முதல்வர் கடிதம்

/

மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி அமைச்சராக்க கவர்னருக்கு முதல்வர் கடிதம்

மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி அமைச்சராக்க கவர்னருக்கு முதல்வர் கடிதம்

மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி அமைச்சராக்க கவர்னருக்கு முதல்வர் கடிதம்


ADDED : மார் 14, 2024 12:44 AM

Google News

ADDED : மார் 14, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ., பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை, அரசு திரும்ப பெற்றது. அவர் அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி, கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி குற்றவாளி என, கடந்த டிசம்பர் 19ல் நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, டிச., 21ல் உத்தரவிட்டது.

இதனால், அவர் தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறையானது, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பொன்முடி வெற்றி பெற்ற, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக, இம்மாதம் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, சட்டசபை செயலகத்தில் இருந்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பொன்முடிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் தொடர்ச்சியாக, பொன்முடி எம்.எல்.ஏ., பதவி இழந்ததால், திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். முறைப்படி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்து வைக்கும்படி, கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தில் எம்.எல்.ஏ., பதவியை இழந்த ஒருவர், ஓரிரு நாட்களில் மீண்டும் எம்.எல்.ஏ., பதவியை பெறுவது, இதுவே முதல் முறை.

அமைச்சராவது எப்போது?


பொன்முடி அமைச்சராக பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடக்க வாய்ப்புள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஏற்கனவே இரண்டு நாள் பயணமாக டில்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதற்காக இன்று காலை டிக்கெட் போடப்பட்டுள்ளது. எனவே, இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடப்பது சந்தேகம் என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us