sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை'

/

'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை'

'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை'

'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை'


ADDED : மார் 11, 2024 03:59 PM

Google News

ADDED : மார் 11, 2024 03:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை எனவும், கால்நடைத் துறைக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வத்திராயிருப்பு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவராம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்ட கிராமங்களில் வத்திராயிருப்பு இல்லை' என வாதிடப்பட்டது. இதனையடுத்து 'ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் கால்நடைத் துறைக்கு தான் இருக்கிறது' எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us