உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 03, 2026 12:40 AM
அ நிறம் | அளவு
சென்னை: நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறவும், பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கும், 'யு.ஜி.சி., நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஜூன் 22 முதல் 30ம் தேதி வரை, யு.ஜி.சி., நெட் தேர்வு நடந்தது. அதில், ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள், முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டவை என கூறப்படுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த யு.ஜி.சி., நெட் தேர்வுகளில் இருந்தே, பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, தேசிய தேர்வுகள் முகமை எனும், என்.டி.ஏ.,விடம் பலரும் முறையிட்டுள்ளனர்.
