உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 03, 2026 12:41 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அதன் உயரதிகாரிகளுடன், மதுக்கூட உரிமையாளர்கள், நேற்று பேச்சு நடத்தினர். அதில், 'மதுக் கூடங்களை மூட வேண்டும்; மூன்று மாதங்களுக்குள், புதிய 'டெண்டர்' கோரி அனுமதி வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உட்பட பல இடங்களில் வழக்கம் போல் மதுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, மதுக்கூடங்களை பூட்டி, 'சீல்' வைக்கும்படி, மேற்பார்வையாளர் க ளுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
