ADDED : ஜூலை 02, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அஜித்குமாரை விசாரிக்க, எந்த சட்ட நடைமுறையையும் போலீசார் பின்பற்றவில்லை, நீதிபதி முன் ஆஜர்படுத்தவில்லை. அஜித்குமாரின் குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர். உடலை பெற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
'எனவே, 1993ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, அஜித்குமார் உயிரிழந்தது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
'இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு புகார் அளித்துள்ளார்.