sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் என புகார்

/

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் என புகார்

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் என புகார்

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் என புகார்


ADDED : ஜூலை 17, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வாயிலாக உரிமம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுவது, ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 56 யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி வசூல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

ஆனால், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமாக, ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால், உரிய பயிற்சி பெற்ற பிறகும், உரிமம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகம் முழுதும் 4,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இயங்குகின்றன. ஒவ்வொன்றிலும் தினமும், 15க்கும் மேற்பட்டோர், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து, பயிற்சி பெற்று வருகின்றனர்.

கார் உள்ளிட்ட கனரக ஓட்டுநர் உரிமம் பெற, பெரும்பாலானோர் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஆனால், நாங்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய சோதனை நடத்தி, உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

வாரத்தில் இரு நாட்களில் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கு, சோதனை நடத்தி, உரிமம் வழங்கப்படுகிறது. இதனால், உரிமம் பெற, வார கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.

அதேநேரம், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. அவர்கள் பொதுமக்கள் போர்வையில் வலம் வருகின்றனர். பொதுமக்களிடம் கூடுதல் தொகை பெற்றுக்கொண்டு பணிகளை முடித்து தருகின்றனர். இவர்களின் தலையீடுகளை குறைக்க கொண்டுவரப்பட்ட, 'ஆன்லைன்' சேவையிலும், அடிக்கடி குளறுபடி நடக்கிறது.

இந்த முறைகேடுகளை தடுக்கவும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கான நேரத்தை அதிகமாக்கி, ஓட்டுநர் உரிமங்களை உடனுக்குடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் கூறும் புகார்கள் குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us