sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு

/

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு


ADDED : நவ 22, 2024 07:36 PM

Google News

ADDED : நவ 22, 2024 07:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சவுக்கு சங்கருக்கு எதிராக தேனி, திருச்சி, கரூர் போலீசில் பதிவான வழக்குகளில் ஜாமின் நிபந்தனையை தளர்த்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து யூடியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக, திருச்சி சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்தனர். கைதான அவருக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை திருச்சி சைபர் கிரைம் போலீசார் முன் ஆஜராக நிபந்தனை விதிக்கப்பட்டது.

தேனி பூதிப்புரத்தில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட சிலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, பழனிசெட்டிபட்டி போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

சவுக்கு சங்கருக்கு எதிராக பண மோசடி வழக்கு கரூர் டவுன் போலீசில் பதிவானது. இவ்வழக்கில் ஜாமின் அனுமதித்து, சனிக்கிழமைதோறும் போலீசில் ஆஜராக கரூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர், 'வெவ்வேறு வழக்குகளில் சென்னை போலீசில் ஆஜராகி கையெழுத்திடுகிறேன். ஒரே நேரத்தில் அனைத்து வழக்குகளிலும் ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் வெவ்வேறு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. அதனால் மதுரை, திருச்சி, கரூர் நீதிமன்றங்கள் விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னையில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும்' என உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.இதை விசாரித்த தனி நீதிபதி, கடந்த அக்., 21ல், ''கீழமை நீதிமன்ற நிபந்தனைகள் மாற்றியமைக்கப்படுகிறது. மனுதாரர் சென்னை சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

சில நாட்களுக்குப் பின், தனி நீதிபதி உத்தரவையும் தளர்த்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு போட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்படுகிறது. தேவையானபோது போலீஸ் விசாரணைக்கு மனுதாரர் கட்டாயம் ஆஜராக வேண்டும்,'' என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us