sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பறிமுதலான பாரத மாதா சிலை; பா.ஜ.,விடம் ஒப்படைக்க உத்தரவு

/

பறிமுதலான பாரத மாதா சிலை; பா.ஜ.,விடம் ஒப்படைக்க உத்தரவு

பறிமுதலான பாரத மாதா சிலை; பா.ஜ.,விடம் ஒப்படைக்க உத்தரவு

பறிமுதலான பாரத மாதா சிலை; பா.ஜ.,விடம் ஒப்படைக்க உத்தரவு


ADDED : நவ 13, 2024 11:36 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'விருதுநகரில் அனுமதி இன்றி வைத்ததாக பறிமுதல் செய்த பாரத மாதா சிலையை, பா.ஜ.,வினரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் சூரக்குண்டு அருகே மாவட்ட பா.ஜ., அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகம் முன் மக்களுக்கு தெரியும் வகையில், பாரத மாதா கல் சிலை நிறுவப்பட்டது. ஆனால் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறை, போலீசாரால் அந்த சிலை அகற்றப்பட்டது.

இதையடுத்து, முன்னறிவிப்பின்றி பட்டா இடத்திற்குள் நுழைந்து, பாரத மாதா சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை திரும்ப ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி, விருதுநகர் மாவட்ட பா.ஜ., நிர்வாகி ராஜகோபால், உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாரத மாதா சிலையை, பா.ஜ.,வினரிடமே ஒப்படைக்க விருதுநகர் கலெக்டருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.






      Dinamalar
      Follow us