sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்., கூட்டணி தொடருமா?

/

காங்., கூட்டணி தொடருமா?

காங்., கூட்டணி தொடருமா?

காங்., கூட்டணி தொடருமா?


ADDED : ஜூலை 24, 2011 05:36 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து, இன்று நடக்கும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்,'' என, எம்.பி., டி.ஆர்., பாலு தெரிவித்தார்.

கோவையில், தி.மு.க.,வின் செயற்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட கழக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர்கள் என்.கே. கே.பி. ராஜா, ராமச்சந்திரன், சாமிநாதன், கண்ணப்பன், சட்டத்துறை இணைச் செயலாளர்கள் ரவி, கிரிராஜன், தலைமை கழக வக்கீல்கள் பரந்தாமன், தண்டபாணி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோர்ட்டில் வக்கீல்களாக பணிபுரிய, சட்டப்படிப்பு மட்டும் போதும் என்ற நிலையை மாற்றி, ஆல் இந்தியா பார் கவுன்சில் பார் தேர்வு எழுத வேண்டும் என்று, ஆல் இந்திய பார் கவுன்சில் கட்டாயப்படுத்தி உள்ளது. இது, கண்டிக்கத்தக்கது; இதனால், இளம் வக்கீல்கள் பாதிக்கப்படுவர். அயல்நாட்டு வக்கீல்கள் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புண்டு. எனவே, இச்சட்டத்தை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என, ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல், மேல் முறையீடு என்ற பெயரில், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் அரசின் பிடிவாதப் போக்கு கண்டிக்கத்தக்கது. தி.மு.க., வின் பொறுப்புகளில் இருப்போர் மீது, பழிவாங்கும் நோக்கோடு போலீசாரை ஏவி விடும் போக்கை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஆலந்தூர் பாரதி பேசுகையில்,''தி.மு.க.,வுக்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ, அப்போதெல்லாம் வக்கீல்கள் அணி உறுதுணையாக நின்று, கழகத்தை காக்கிறது. எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், எமர்ஜென்சி காலத்திலும், கழகம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் முறியடிக்கப்பட்டன. 1996ல், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, வக்கீல்களால் தொடுக்கப்பட்ட டான்சி வழக்கால் தான், அவர் பதவியிறங்க காரணமாயிற்று,'' என்றார்.

இன்று தெரியும்: செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.பி., டி.ஆர்.பாலுவிடம், 'தி.மு.க., - காங்., கூட்டணி எந்த நிலையில் உள்ளது' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ''நாளை (இன்று) நடக்கும் பொதுக்குழுவில், இப்பிரச்னை மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் பிரச்னைகளையும் விவாதித்து முடிவு செய்யப்படும். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வை சேர்ந்த இருவருக்கு வாய்ப்பளிக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us