இடைத்தேர்தலுக்கு காங்., சார்பில் பணிக்குழு அறிவிப்பு
இடைத்தேர்தலுக்கு காங்., சார்பில் பணிக்குழு அறிவிப்பு
ADDED : செப் 13, 2026 11:53 PM
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு, காங்கிரஸ் சார்பில், அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை:
மதுராந்தகம் தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவராக அமைச்சர் விஸ்வநாதன்; துணை தலைவர்களாக எம்.பி.,க்கள் விஷ்ணுபிரசாத், சுதா ராமகிருஷ்ணன்; ஒருங்கிணைப்பாளர்களாக காங்., செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபு உட்பட 27 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவராக அமைச்சர் ராஜேஷ்குமார், துணைத் தலைவர்களாக ஜோதிமணி எம்.பி., காங்., திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் கிட்டு சாமி மற்றும் மண்டல பொறுப்பாளர்களாக அகில இந்திய காங்., செயலர் மயூரா ஜெயகுமார் உட்பட 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
