தி.மு.க.,விடம் சீட் கேட்டு பிச்சை எடுக்கிறது காங்.,
தி.மு.க.,விடம் சீட் கேட்டு பிச்சை எடுக்கிறது காங்.,
ADDED : ஜன 30, 2026 01:48 AM
திண்டிவனத்தில், 35 ஆண்டுகளாக செயல்பட்ட பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதற்கு, மீண்டும் இந்திரா பெயரை வைக்காமல், கருணாநிதி பெயர் வைக்கப்பட்டுள்ளது. காங்.,குடன் கூட்டணி வைத்துக் கொண்டே, இந்திரா பெயரை, துாக்கியெறிந்து விட்டு, கருணாநிதி பெயரை வைக்க என்ன காரணம்?
செஞ்சியில் புதிய பஸ் நிலையத்திற்கு, கருணாநிதியின் தாய் அஞ்சுகம் பெயரை வைத்துள்ளனர். இதை கேட்க காங்., கட்சியினருக்கு துப்பில்லை. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தால் உணர்வு இருக்கும். தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு, தி.மு.க.,விடம் காங்கிரசார் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் போதை பழக்கத்தால், கொலை, கொள்ளை அதிகம் நடக்கிறது. சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டது. எனவே, மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகம் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

