ADDED : நவ 07, 2025 07:25 AM

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒரு அரசு துறையில் கூட வேலை வழங்கவில்லை. நகராட்சித்துறையில் 2,125 பணியிடங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கியதைப் போல, 1,400 ஊராட்சி செயலர் பணிகளையும் பணம் வாங்கிக் கொண்டு நிரப்பக்கூடாது. பள்ளி, கல்லுாரிகளை திறந்தோம் என பெருமை பேசாமல், பணம் வாங்காமல் அரசு வேலை கொடுத்தோம் என முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும்.
ஆட்சிக்கு வரும் முன், ஜாதி வேறுபாடு இல்லை என்கின்றனர். ஆட்சிக்கு வந்த பின், தங்கள் ஜாதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
தி.மு.க.,வை தவறு செய்ய வைப்பதே, அதன் கூட்டணி கட்சிகள் தான். கம்யூனிஸ்டுகளை தவிர, மற்ற கட்சிகள் தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிக்கின்றன; அதிலும், காங்கிரஸ் ஓவர் ஜால்ரா. தி.மு.க.,வின் ஒரு தவறை கூட சுட்டிக்காட்டும் மனப்பான்மை காங்கிரசுக்கு இல்லை.
- கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம்

