sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோடி வருகைக்கு எதிர்ப்புகாங்., ஆர்ப்பாட்டம்

/

மோடி வருகைக்கு எதிர்ப்புகாங்., ஆர்ப்பாட்டம்

மோடி வருகைக்கு எதிர்ப்புகாங்., ஆர்ப்பாட்டம்

மோடி வருகைக்கு எதிர்ப்புகாங்., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 24, 2024 02:23 AM

Google News

ADDED : பிப் 24, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் இறங்கி, மனித சங்கிலி போராட்டம்; குலசேகரபட்டினத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்' என, தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில், 'பாரம்பரியமாக பங்கேற்கும் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவை புறக்கணிக்கிறோம். இன்று முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம்' என, ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கும் போராட்டத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின், மீனவர்கள் விரோதப் போக்கை கண்டித்து, பிப்., 27ல், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். பிப்., 28ல், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us