sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒருமித்த முடிவு; ஒரே நாளில் மதுக்கடைகள் 'குளோஸ்': சொல்லுறது யாருன்னு பாருங்க!

/

ஒருமித்த முடிவு; ஒரே நாளில் மதுக்கடைகள் 'குளோஸ்': சொல்லுறது யாருன்னு பாருங்க!

ஒருமித்த முடிவு; ஒரே நாளில் மதுக்கடைகள் 'குளோஸ்': சொல்லுறது யாருன்னு பாருங்க!

ஒருமித்த முடிவு; ஒரே நாளில் மதுக்கடைகள் 'குளோஸ்': சொல்லுறது யாருன்னு பாருங்க!

73


ADDED : செப் 22, 2024 12:08 PM

Google News

ADDED : செப் 22, 2024 12:08 PM

73


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்' என வி.சி.க., தலைவர் திருமாளவன் தெரிவித்தார்.

இது குறித்து திருமாவளவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: உணர்வுபூர்வமான ஒரு பிரச்னையில் நாம் கை வைத்துள்ளோம். இது எல்லாம் மாநாடு போல சாதாரணமானதாக நினைத்து விடக் கூடாது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன. ஒரு கட்சி கூட மதுக்கடைகள் இருப்பதால் என்ன தவறு என்று சொல்ல வாய்ப்பு இல்லை.

மூடிவிட முடியும்!

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. இது தான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன? அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்! இந்திய அரசே! தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு! மதுவிலக்கு சட்டத்தை இயற்று! தமிழக அரசே! மதுக்கடைகளை இழுத்து மூடு!. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us