sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 நகரங்களில் தனியார் பங்கேற்புடன் புதிய பஸ் நிலைய பணிகள் துவக்கம்

/

5 நகரங்களில் தனியார் பங்கேற்புடன் புதிய பஸ் நிலைய பணிகள் துவக்கம்

5 நகரங்களில் தனியார் பங்கேற்புடன் புதிய பஸ் நிலைய பணிகள் துவக்கம்

5 நகரங்களில் தனியார் பங்கேற்புடன் புதிய பஸ் நிலைய பணிகள் துவக்கம்


ADDED : ஜன 21, 2025 03:29 AM

Google News

ADDED : ஜன 21, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருச்சி, ஈரோடு உள்ளிட்ட ஐந்து நகரங்களில், தனியார் பங்கேற்புடன் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளை, 'டுபிசெல்' எனப்படும் தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் துவக்கி உள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், போக்குவரத்து நெரிசல் காரணமாக, பஸ் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நெருக்கடி ஏற்படுகிறது.

அரசு முடிவு


அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகரித்துள்ள நிலையில், பஸ் நிலையங்களை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இதனால், ஒவ்வொரு நகரத்திலும், ஏற்கனவே இருக்கும் பஸ் நிலையத்தை ஒட்டி நிலம் இருந்தால், அதை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

கூடுதல் நிலம் இல்லாத ஊர்களில், வேறு பகுதியில் நிலம் தேர்வு செய்து, புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம் நகரங்களுக்கு அடுத்தபடியாக, மேலும் சில நகரங்களில், பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

அறிக்கை


இதற்கான பொறுப்பு, தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமான டுபிசெல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, ஈரோடு நகரங்களில், புதிய பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கிஉள்ளன.

அரசு நிதியுதவி உள்ளபோதிலும், இதற்கான பணிகள் தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட உள்ளன.

நிலம் தேர்வு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, கலந்தாலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளதாக, டுபிசெல் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us