sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தொடர் தாமதம்; தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

/

காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தொடர் தாமதம்; தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தொடர் தாமதம்; தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தொடர் தாமதம்; தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்


ADDED : டிச 16, 2024 08:45 AM

Google News

ADDED : டிச 16, 2024 08:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச.,16) உருவாகும் என கணித்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் இன்று (டிச.,16) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும். குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி நகரும். தமிழகத்தில் டிச., 17 மற்றும் 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

12 முதல் 20 செ.மீ., வரை மழை பொழிய வாய்ப்பு உள்ளதால், 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் டிசம்பர் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us