sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓசூரில் இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா விமான நிலையம்?

/

ஓசூரில் இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா விமான நிலையம்?

ஓசூரில் இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா விமான நிலையம்?

ஓசூரில் இடம் தேர்வு, என்.ஓ.சி., பெறுவதில் தொடர் இழுபறி ஆந்திர மாநில எல்லைக்கு செல்கிறதா விமான நிலையம்?


ADDED : ஜன 04, 2025 09:02 PM

Google News

ADDED : ஜன 04, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திடம் இருந்து என்.ஓ.சி., பெறுவது மற்றும் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், ஆந்திர மாநில எல்லைக்கு விமான நிலையம் செல்வதாக தகவல் பரவத் துவங்கியுள்ளது.

தமிழக எல்லை நகரான ஓசூர், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இங்கு பன்னாட்டு விமான நிலையம் இல்லாததால், 75 கி.மீ., தொலைவில் உள்ள பெங்களூரு கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தான், ஓசூர் பகுதி மக்களும், தொழில் துறையினரும் செல்ல வேண்டியுள்ளது.

முதல்வர் அறிவிப்பு


கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஓசூரில் இருந்து விமான நிலையம் செல்ல அதிகபட்சம், இரண்டரை மணி நேரமாகிறது.

தொழில் வளர்ச்சி அடையவும், மக்கள் பயன்பாட்டிற்கும், ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2021 டிசம்பரில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தேவை, மதிப்பீடு, விமான போக்குவரத்து முன்னறிவிப்பு மற்றும் சாத்தியமான இடங்களை அடையாளம் காண ஆலோசகர்களை அழைத்தது.

கடந்தாண்டு ஜூன் 27ல், தமிழக சட்டசபையில், 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஓசூரில் ஆண்டுக்கு, 3 கோடி பயணியர் வந்து செல்லும் வகையில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்' என்று அறிவித்தார்.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், கர்நாடகா மாநிலத்தின் தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு சென்று விடும் என, அம்மாநில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்.

அதனால், தமிழக அரசுக்கு போட்டியாக, பெங்களூரு நகருக்கு தெற்கே, ஓசூரையொட்டி சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு, 3,000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில், 2,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும், கர்நாடக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், தமிழக எல்லையான ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை, தமிழகம் கைவிட வேண்டிய நிலை கூட உருவாகலாம்.

ஐந்து இடங்கள்


இதுமட்டுமின்றி, பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., சுற்றளவிற்கு எந்த விமான நிலையத்திற்கும் அனுமதி கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனை, 2033ம் ஆண்டு வரை உள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஓசூர், 75 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால், ஓசூரில் விமான நிலையம் அமைக்க, கெம்பே கவுடா விமான நிலையம் தடையின்மை சான்று வழங்க வேண்டும். இல்லையெனில், விமான நிலையம் அமைப்பது சிரமம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதற்கிடையே, ஓசூர் அருகே சின்ன பேலகொண்டப்பள்ளி, 'தால்' நிறுவனத்தில் இருந்து, 9 கி.மீ.,யில் ஒரு இடம் மற்றும் குருபரப்பள்ளியை அடுத்துள்ள டெல்டா நிறுவனம் அருகே ஒரு இடம் உட்பட மொத்தம் ஐந்து இடங்களை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகள் தேர்வு செய்து, கடந்த செப்டம்பரில் ஆய்வு செய்தனர்.

மேலும், கெம்பேகவுடா விமான நிலைய நிர்வாகம் மற்றும் ஓசூர் தால் நிர்வாகம் ஆகியவற்றுடன் பேச்சும் நடத்தி சென்றுஉள்ளனர்.

அது தொடர்பான இடைக்கால அறிக்கை, தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில எல்லையான குப்பத்திற்கு அருகே, தமிழக எல்லையான கிருஷ்ணகிரியை ஒட்டி இரு மாநில மக்களும் பயன்படுத்தும் வகையில், பொதுவாக ஒரு விமான நிலையத்தை அமைக்க முயற்சிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே விமான நிலையம் அமைந்தால், கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ.,யை தாண்டி விடும். அதனால் அதற்கு என்.ஓ.சி., பெற தேவையில்லை.

ஆனால், கிருஷ்ணகிரி எல்லை பகுதிகளில், 2,000 ஏக்கர் நிலம் இல்லை. விவசாய நிலங்களையே கையகப்படுத்த வேண்டும்.

ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதாக இருந்தாலும், விவசாய நிலங்களையும் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத் கூறுகையில், ''தற்போது ஐந்து இடங்களை ஆய்வு செய்துள்ளனர். ஆனால், எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்பது முடிவாகவில்லை.

''வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். கிருஷ்ணகிரியை ஒட்டி குப்பத்திற்கு விமான நிலையத்தை கொண்டு செல்ல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புவதாக வரும் தகவல், எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us