ADDED : நவ 19, 2024 07:41 AM
காரைக்கால்: காரைக்கால்மேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த வைத்திலிங்கம் மகள் சந்தியா,35; இவர் சீர்காழி தாலுகா கூழையாறு பகுதியை சேர்ந்த ரமேஷ்,46 ;என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ரிஷிகுமார் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ் தினம் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததால் வைத்திலிங்கம் தனது மகள் சந்தியாவுக்கு அப்பகுதியில் வீடு ஒன்று கட்டிகொடுத்துள்ளார். இதில் இருவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரமேஷ் தனது மகன் ரிஷிகுமாரிடம், 'அம்மா சண்டை போடுவதால் சாகப்போகிறேன்' எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இது வழக்கமான தகராறு தான் என நினைத்த அவர், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
மாலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் உள்ளே ஒரே சேலையில் தந்தை ரமேஷ், தாய் சந்தியா ஆகிய இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த நகர போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.