sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காதல் ஜோடி வெட்டிக் கொலை; காதலனின் அண்ணன் குற்றவாளி என அறிவித்தது கோர்ட்

/

காதல் ஜோடி வெட்டிக் கொலை; காதலனின் அண்ணன் குற்றவாளி என அறிவித்தது கோர்ட்

காதல் ஜோடி வெட்டிக் கொலை; காதலனின் அண்ணன் குற்றவாளி என அறிவித்தது கோர்ட்

காதல் ஜோடி வெட்டிக் கொலை; காதலனின் அண்ணன் குற்றவாளி என அறிவித்தது கோர்ட்

2


ADDED : ஜன 23, 2025 12:06 PM

Google News

ADDED : ஜன 23, 2025 12:06 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டத்தில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலனின் அண்ணனை குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரம், வரும் ஜனவரி 29ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 22. இதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியா, 17, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கனகராஜ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜூன் 28 தேதி, காதல் திருமண ஜோடியை, கனகராஜின் அண்ணன் வினோத் வெட்டிக் கொலை செய்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வினோத், 25, அவரது நண்பர்கள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, கோவை எஸ்சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

விசாரித்த சிறப்பு நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட வினோத்தை, குற்றவாளி என்று அறிவித்தார். மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி வினோத்துக்கான தண்டனை வரும் ஜனவரி 29ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us