sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமைக்கருவேல மரம் விவகாரம் ஐகோர்ட் அதிருப்தி

/

சீமைக்கருவேல மரம் விவகாரம் ஐகோர்ட் அதிருப்தி

சீமைக்கருவேல மரம் விவகாரம் ஐகோர்ட் அதிருப்தி

சீமைக்கருவேல மரம் விவகாரம் ஐகோர்ட் அதிருப்தி


ADDED : பிப் 29, 2024 11:42 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில், அரசு முறையாக செயல்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

தமிழகம் முழுதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளின் நிலை குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை, 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில், அரசு முறையாக செயல்படவில்லை; கடமைக்காக, வழக்கு நடத்துவது போல் உள்ளது. ஒரு கிராமம் அல்லது பஞ்சாயத்தில் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்களை அகற்ற, ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை. சமதள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவதில் என்ன பிரச்னை? மரங்களை அகற்றும் பணியை, ஏலத்தில் விடலாமே' என, கேள்விகள் எழுப்பினர்.

இன்றும் விசாரணை தொடர்கிறது.






      Dinamalar
      Follow us