ADDED : மார் 15, 2024 06:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி மாலை 5 மணிக்கு நடப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது.
தேர்வை காரணம் காட்டி பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது.
பிரதமர் பாதுகாப்பை சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி செய்து கொள்வர்
போலீஸ் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர, பிற மத ரீதியான பதட்டமான பகுதி எனக்கூறி அனுமதி மறுக்கக்கூடாது.
உரிய பாதுகாப்புடன் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தலைவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால், அவர்கள் மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது.
-பிரதமர் மோடி வாகன பேரணிக்கு அனுமதி மறுத்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.

