sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொட்டில் குழந்தைகள் திட்டம் 2024ல் 129 குழந்தைகள் மீட்பு

/

தொட்டில் குழந்தைகள் திட்டம் 2024ல் 129 குழந்தைகள் மீட்பு

தொட்டில் குழந்தைகள் திட்டம் 2024ல் 129 குழந்தைகள் மீட்பு

தொட்டில் குழந்தைகள் திட்டம் 2024ல் 129 குழந்தைகள் மீட்பு


ADDED : ஜன 02, 2025 11:13 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் வரை, 129 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண் சிசுக்கொலைகளை தடுக்க, 1992 முதல் தொட்டில் குழந்தை திட்டம், 10 மாவட்டங்களில் அரசால் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் துவங்கியதில் இருந்து இதுவரை, 4,730 பெண் குழந்தைகள் உட்பட, 6,196 குழந்தைகள் பெறப்பட்டு உள்ளனர்.

அவர்கள் குழந்தைகள் காப்பகங்களில் வளர்க்கப்பட்டு, அரசு விதிகளுக்கு உட்பட்டு, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்படுகின்றனர்.

இத்திட்டத்தில், 2023ம் ஆண்டில், 155 குழந்தைகள் பெறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பர், வரை, 79 பெண் குழந்தைகள் உட்பட, 129 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us