கார் வாங்க தனியாருக்கும் கடன் கூட்டுறவு வங்கிகள் ஏற்பாடு
கார் வாங்க தனியாருக்கும் கடன் கூட்டுறவு வங்கிகள் ஏற்பாடு
ADDED : மார் 18, 2025 10:10 PM
சென்னை:தனி நபர்கள், பைக், கார் வாங்க கூட்டுறவு வங்கிகளும் கடன் வழங்க உள்ளன.
கூட்டுறவு துறையின் கீழ், பல்வேறு கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பயிர் கடன், நகைக்கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பிரிவுகளில், கடன்கள் வழங்கப்படுகின்றன.
முதல் முறையாக, பைக், கார் வாங்க, கடன் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக அரசு பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 23 கோடி ரூபாய் கடன் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டது.
கார், பைக் மதிப்பில் தலா, 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதுவரை, 1,500 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தனி நபர்களுக்கும், பைக், கார் வாங்க, வாகன கடன் வழங்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.