ADDED : நவ 26, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக, நிர்வாகிகளின் கருத்துகளை கேட்க தமிழகம் வந்திருக்கின்றேன்.
யாரை மாவட்ட தலைவராக நியமித்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியும் என்பதை கட்சியினரிடமே கேட்டு முடிவெடுங்கள்; குற்றவாளிகளை மாவட்ட தலைவராக நியமிக்கக் கூடாது என, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப, மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்படுவர்.
குற்றவாளிகளை நியமித்தால், கட்சிக்கு பலவீனம். எனவே, 100 சதவீதம் கட்சிக்கு விசுவாசமானவர்கள் மற்றும் கட்சிக்கு உழைத்தவர்களை அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அப்படிப்பட்டவர்களையே, நிர்வாகப் பொறுப்புகளுக்கு கொண்டு வருவோம்.
- விஜய் இந்தர் சிங்கிலா, தேசிய இணைப் பொறுப்பாளர், காங்.,

