sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

/

பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

பயிர்கள் மூழ்கியது; ஜி.கே.வாசன் கவலை!

3


ADDED : நவ 19, 2024 12:51 PM

Google News

ADDED : நவ 19, 2024 12:51 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. அவற்றை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கவலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நெற்பயிர்கள் நீரில் முழ்கி விவசாயிகளை மிகுந்த கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தஞ்சையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால்கள் முறையாக தூர்வார்வாரப்படவில்லை.

அதனால் மழைநீர் வடியாமல் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். ஆயிரக்கனக்கான ஏக்கர் சம்மா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை காக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டும்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவற்றிக்கு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us