கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 15, 2025 02:42 AM

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள், சி.பி.எஸ்.இ.,தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ்2 சி.பி.எஸ்.இ., தேர்வில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் கடலுார் மாவட்ட அளவில் சாதனை படைத்ததுடன், தொடர்ந்து, நுாறு சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
மாணவி சக்தி ஹர்ஷினி 500க்கு 492 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாணவர் குமரவேல் 485 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி ஹாசினி, மாணவர் சஞ்சய் 479மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர்.
பள்ளியில் 450க்கும் மேல் 25 மாணவர்கள், 400க்கும் மேல் 63 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் மாணவி சக்தி ஹர்ஷனி, வணிகவியல் பாடத்தில் மாணவி ஹித்தாலி நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவகுமார், லட்சுமி சிவகுமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.