ADDED : அக் 11, 2024 05:47 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.
இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் சப்ளை செய்தவர்கள், சாராயம் விற்பனை செய்தவர்கள் என 24 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில், கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, அரிமுத்து, தெய்வீகன், வேலு உள்ளிட்ட 24 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 24 பேரையும் காணொளி வாயிலாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து, 24 பேரின் நீதிமன்ற காவலை வரும் 24ம் தேதி வரை நீட்டித்து நீதி பதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.

