ADDED : ஜன 24, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தங்கம் கடத்தல் குருவிகளை, சோதனையின்றி வெளியில் விட்டதற்காக, சுங்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது' என, சுங்கத்துறை அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் ஸ்ரீனிவாசநாயக் வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடுகளில் இருந்து தங்கம், ஐபோன்கள் கடத்தி வந்த சிலரை, எந்த சோதனையுமின்றி வெளியில் விட்டதால், சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் பணியாற்றிய, நான்கு கண்காணிப்பாளர்கள், கடந்த 18ம் தேதி சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது; அது தவறு.
நிர்வாக காரணங்களுக்காவே, அதிகாரிகள் நான்கு பேர் மாற்றப்பட்டனர். கடத்தல்காரர்களை சோதனையின்றி வெளியில் விட்டதாக, வெளியான தகவலில் உண்மையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

