sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை

/

வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை

வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை

வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை

3


ADDED : மே 25, 2025 05:21 AM

Google News

ADDED : மே 25, 2025 05:21 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஆன்லைனில்' வர்த்தகம் செய்தால், அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாடு முழுதும் மோசடி கும்பல், 'யு.பி.ஐ., கேஷ்பேக், டிஜிட்டல் அரஸ்ட்' என, பல்வேறு வகைகளில், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது.

மோசடி புகார்கள் குறித்து, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். எனினும், குறைந்த பணம் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் பார்க்கலாம் என, ஆசையை துாண்டும், மோசடி கும்பலிடம் சிக்கி, பணத்தை இழப்போர் அதிகரித்து வருகின்றனர்.

பல மடங்கு லாபம்


இதுகுறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியதாவது:

'ஆன்லைன்' செயலி யில், பணம் முதலீடு செய்தால், 10 மடங்கு லாபம் கிடைக்கிறது என, வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் செயலி வாயிலாக விளம்பரங்கள் வருகின்றன. இந்த மோசடி கும்பல், பிரபல நிறுவனங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துகிறது.

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி, அதன் பங்குகளை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன். தற்போது பல மடங்கு லாபம் கிடைத்துள்ளது. பங்குகளை வாங்கி லாபம் சம்பாதிக்கும் எளிய வழிகளை கற்றுத் தருகிறோம் எனக்கூறி, மக்களை நம்ப வைக்கின்றனர்.

மக்களும் பிரபலமான நிறுவனத்தின் பெயரை கூறுவதால், முதலீடு செய்ய விரும்பி, மோசடி கும்பல் சொல்லும் வழியில் பணத்தை அனுப்புகின்றனர். துவக்கத்தில் லாபம் கிடைப்பது போல செய்கின்றனர்.

ஏமாற வேண்டாம்


கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிக பணத்தை முதலீடு செய்யும்போது, பணத்துடன் கம்பி நீட்டி விடுகின்றனர். பணத்தை இழந்தவர்களால், மீண்டும் அதை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த மோசடியில் ஈடுபடுவோர், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பதால், அவர்களை கண்டுபிடிப்பது எளிதல்ல. எனவே, குறைந்த முதலீட்டில், அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us