sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு

/

பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு

பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு

பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு

23


UPDATED : டிச 06, 2024 10:30 PM

ADDED : டிச 06, 2024 07:05 PM

Google News

UPDATED : டிச 06, 2024 10:30 PM ADDED : டிச 06, 2024 07:05 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சேதத்தை சீரமைத்ததற்காக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்து உள்ளது.

சமீபத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடந்ந்த பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவி செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.



ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னையில் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு நாளை பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். புதுச்சேரிக்கும் செல்ல உள்ளனர்.

இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்காக, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதுவரை 28 மாநிலங்களுக்கு 21,718 கோடி விடுவித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

முதல்வர் கோரிக்கை சென்னையில் முதல்வர் ஸ்டாலினை மத்திய குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் அதிகம் நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.








      Dinamalar
      Follow us