sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தை நெருங்கும் பெஞ்சல் புயல்; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

/

தமிழகத்தை நெருங்கும் பெஞ்சல் புயல்; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழகத்தை நெருங்கும் பெஞ்சல் புயல்; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழகத்தை நெருங்கும் பெஞ்சல் புயல்; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

1


UPDATED : நவ 30, 2024 11:42 AM

ADDED : நவ 30, 2024 06:19 AM

Google News

UPDATED : நவ 30, 2024 11:42 AM ADDED : நவ 30, 2024 06:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் சென்னையில் இருந்து, 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தற்போது மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து 110 கி.மீ., தொலையில் மையம் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பெஞ்சல் புயலானது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று(நவ.30) மாலை அல்லது நாளை (டிச.1) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் பேட்டி

'மழை நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்து இருக்கிறது' என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us