உருவானது டிட்வா புயல்; நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்
உருவானது டிட்வா புயல்; நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்
ADDED : நவ 27, 2025 03:14 PM

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக வலுப்பெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
இன்று (நவ.,27) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தஞ்சை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
நாளை (நவ.,28) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* புதுக்கோட்டை
* தஞ்சை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
நாளை (நவ.,28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்,
* சிவகங்கை,
* திருச்சி,
* அரியலூர்
* மயிலாடுதுறை
நாளை (நவ.,28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தூத்துக்குடி
* விருதுநகர்
* மதுரை
* பெரம்பலூர்
* கடலூர்
நாளை மறுநாள் (நவ.,29) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நாகப்பட்டினம்
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* கடலூர்
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
நாளை மறுநாள் (நவ.,29) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தஞ்சை
* அரியலூர்
* பெரம்பலூர்
* கள்ளக்குறிச்சி
* திருவண்ணாமலை
* வேலூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* சென்னை
* திருவள்ளூர்
நாளை மறுநாள் (நவ.,29) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* புதுக்கோட்டை
* திருச்சி
* கரூர்
* நாமக்கல்
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
நவ.,30ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* சென்னை
* திருவள்ளூர்
நவ.,30ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* வேலூர்
* விழுப்புரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

