sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பைக் - லாரி மோதியதில் தாய் கண்முன் மகள் பலி

/

பைக் - லாரி மோதியதில் தாய் கண்முன் மகள் பலி

பைக் - லாரி மோதியதில் தாய் கண்முன் மகள் பலி

பைக் - லாரி மோதியதில் தாய் கண்முன் மகள் பலி


ADDED : மே 26, 2025 02:33 AM

Google News

ADDED : மே 26, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பரமசிவம். இவரது வீட்டிற்கு, டி.கல்லுப்பட்டியை சேர்ந்த உறவினர் ஜெயபாண்டி மனைவி வெண்ணிலா, 35, அவரது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா, 10, ஆசினியா, 7, ஆகியோர் வந்திருந்தனர்.

அவர்களை ஊருக்கு அனுப்புவதற்காக, நேற்று காலை பரமசிவம், தன் பைக்கில் அழைத்துச் சென்றார். பசுவந்தனை சாலையில், பின்னால் வந்த டேங்கர் லாரி, பைக் மீது மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி ஏஞ்சல் ஆராதியா தலை நசுங்கி இறந்தார். பரமசிவம், வெண்ணிலா, சிறுமி ஆசினியா படுகாயமடைந்தனர்.

கோவில்பட்டி மேற்கு போலீசார், அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, டேங்கர் லாரி டிரைவர் சிவந்திபட்டியை சேர்ந்த ஆறுமுகசாமியை கைது செய்தனர்.

காயமடைந்தோரை மீட்க, தகவல் தெரிவித்து அரை மணி நேரத்திற்கும் மேலாகியும், 108 ஆம்புலன்ஸ் வராததால், தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில், போலீசார் அனுப்பினர்.






      Dinamalar
      Follow us