sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

/

பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு


ADDED : செப் 29, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்தது.

கரூர், வேலுச்சாமிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில், 39 பேர் உயிரிழந்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கரூர், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன், 34, என்பவர், நேற்று மதியம் உயிரிழந்தார்.

இதனால், பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோர் பலியானவர்களின் உடலுக்கு அடுத்தடுத்து அஞ்சலி செலுத்தினர்; மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவர்களை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த சம்பவத்தில், 13 ஆண்கள், 18 பெண்கள், 9 குழந்தைகள் என, 40 பேர் உயிரிழந்தனர். அதில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 32 பேர், ஈரோடு மாவட்டம் - 2, திருப்பூர் - 2, திண்டுக்கல் - 2, சேலம் - 2 பேர் அடக்கம்.

தாய், மகள்கள் பலி கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சிவசக்தி நகரை சேர்ந்த ஆனந்த ஜோதி மனைவி ஹேமலதா, 25. இவர், நேற்று முன்தினம் இரவு, விஜயை பார்ப்பதற்காக, தன் இரண்டு மகள்கள் சாய் லெட்சனா, 8, சாய் ஜீவா, 4, ஆகியோருடன் வந்திருந்தார்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஹேமலதா, சாய் லெட்சனா, சாய் ஜீவா ஆகிய மூவரும் இறந்தனர்.

ஏட்டு மனைவி கரூர் - ஈரோடு சாலை, வடிவேல் நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர், கரூர் ரோந்து போலீஸ் வாகனத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா, 33. இவர், த.வெ.க., கூட்டத்துக்கு சென்ற நிலையில், மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு, ஒரு பெண், ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஒரே கிராமத்தில் 4 பேர் கரூ ர் மாவட்டம், ஏமூர்புதுாரை சேர்ந்த அருக்காணி, 60, பிரியதர்ஷினி, 35, இவரது மகள் தரணிகா, 14, சந்திரா, 40, ஆகிய நான்கு பேரும், விஜய் கூட்டத்துக்கு சென்றபோது நெரிசலில் சிக்கி இறந்த னர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

சகோதரிகள் கரூர், வேலுச்சாமி புரத்தை சேர்ந்த பெருமாள் மகள்கள் கோகிலா, 14, பழனியம்மாள், 11. இவர்கள் இருவரும் விஜய் கூட்டத்துக்கு சென்ற நிலையில், மூச்சு திணறி உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us