sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ் ஓட்டும்போது டிரைவர் துாங்கினால் ஒலி எழுப்பும் கருவி 500 பஸ்களில் அமைக்க முடிவு

/

பஸ் ஓட்டும்போது டிரைவர் துாங்கினால் ஒலி எழுப்பும் கருவி 500 பஸ்களில் அமைக்க முடிவு

பஸ் ஓட்டும்போது டிரைவர் துாங்கினால் ஒலி எழுப்பும் கருவி 500 பஸ்களில் அமைக்க முடிவு

பஸ் ஓட்டும்போது டிரைவர் துாங்கினால் ஒலி எழுப்பும் கருவி 500 பஸ்களில் அமைக்க முடிவு


ADDED : ஜூன் 05, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பஸ் ஓட்டும்போது துாங்கினால், மொபைல் போன் பேசினால் எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதிநவீன கருவிகள் 500 பஸ்களில் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

நீண்ட துாரம் அரசு பஸ்களில் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டி.எம்.எஸ்., எனப்படும் 'டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பிரத்யேக தொழில்நுட்ப கருவியில். 'சிசிடிவி கேமரா' மற்றும் மின்ணணு சாதனங்கள் இடம்பெறும்.

ஓட்டுநர் சோர்வாக இருந்து துாங்கினால், 'பீப்' சத்ததுடன் எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து, ஓட்டுனர்கள் சற்று, 'ரிலாக்ஸ்' ஆகி, டீ குடிப்பது அல்லது சில நிமிடம் நடப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், துாக்க உணர்வை தடுக்க முடியும்.

மேலும், மொபைல் போனில் பேசுவது, பயணியரிடம் தேவையற்ற அரட்டையில் ஈடுபடுவது போன்ற ஓட்டுநரின் செயல்களையும், அந்தந்த கிளை அலுவலகங்களில் இருந்தே கண்காணிக்க முடியும்.

முதல் கட்டமாக, 500 பஸ்களில், இந்த புதிய முறையை கொண்டு வர, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், இது பயன்பாட்டுக்கு வரும். படிப்படியாக மற்ற பஸ்களில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us