sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி, கல்லுாரிகளில் மரக்கன்றுகள் நட முடிவு

/

பள்ளி, கல்லுாரிகளில் மரக்கன்றுகள் நட முடிவு

பள்ளி, கல்லுாரிகளில் மரக்கன்றுகள் நட முடிவு

பள்ளி, கல்லுாரிகளில் மரக்கன்றுகள் நட முடிவு


ADDED : பிப் 16, 2024 12:44 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மரக்கன்றுகள் நடப்படும்,'' என, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - பூண்டி கலைவாணன்: திருவாரூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில் மரங்கள் வளர்க்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலை வளாகத்தில், பொது நல ஆர்வலர்கள், பொது மக்கள், அங்குள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி உள்ளனர். அப்பகுதியிலும், பள்ளி, கல்லுாரியிலும், மரக்கன்றுகள் நட வேண்டும்.

அமைச்சர் மெய்யநாதன்: திருவாரூர் மத்திய பல்கலையில், 75 லட்சம் ரூபாயில், மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. 'பசுமைப் பள்ளி' என்ற திட்டத்தை, முதல்வர் துவக்கி உள்ளார்.

ஒவ்வொரு பள்ளிக்கும், 20 லட்சம் ரூபாய் செலவில், பள்ளி வளாகம் முழுதும் மரங்கள் நடுவது, மூலிகை, காய்கறி தோட்டம் வைப்பது, பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவது, மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்துவது என்ற முன்மாதிரி திட்டம் இது.

முதலில், 25 பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு, 100 பள்ளிகளில் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், 'பசுமைத் தமிழகம்' என்ற திட்டத்தில், ஆண்டுக்கு 10 கோடி மரங்கள் நடப்படுகின்றன. வரும் நிதியாண்டில், திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும் மரக்கன்றுகள் நடப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us