sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழையின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்

/

மழையின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்

மழையின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்

மழையின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்


ADDED : மார் 04, 2024 12:48 AM

Google News

ADDED : மார் 04, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் 122.50 அடியாக குறைந்தது.

கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறு அணைப் பகுதியில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவுகிறது.

ஜன.,17ல் 139 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 122.50 அடியானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 கன அடியாக இருந்தது.

தமிழகப்பகுதிக்கு குடிநீர், இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3123 மில்லியன் கன அடியாகும். தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது நடந்துவரும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு போதுமானதாக இருந்த போதிலும், மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் முதல் போக நெல் சாகுபடிக்காக வரும் ஜூன் முதல் தேதியே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும்.

அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 72 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us