sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அப்பாவு மீதான அவதூறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

/

அப்பாவு மீதான அவதூறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அப்பாவு மீதான அவதூறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அப்பாவு மீதான அவதூறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு


ADDED : நவ 27, 2024 08:30 PM

Google News

ADDED : நவ 27, 2024 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, அ.தி.மு.க.,வின் வழக்கறிஞர் அணி இணைச் செயலர் பாபு முருகவேல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2023ல், சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ''தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்தனர். தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், அதை ஏற்க மறுத்து விட்டார். அதனால் எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் சேரும் நிகழ்வு நடக்கவில்லை,'' என தெரிவித்திருந்தார்.

சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு, அ.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால், சபாநாயகர் அப்பாவு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி இணைச் செயலர் பாபு முருகவேல், அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அப்பாவுவின் கோரிக்கையை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us