sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு 'ஜாக்பாட்'

/

எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு 'ஜாக்பாட்'

எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு 'ஜாக்பாட்'

எத்தனை ஊழல் புகார் வந்தாலும்... செல்வப்பெருந்தகைக்கு 'ஜாக்பாட்'

16


UPDATED : ஏப் 13, 2025 07:40 AM

ADDED : ஏப் 13, 2025 05:58 AM

Google News

UPDATED : ஏப் 13, 2025 07:40 AM ADDED : ஏப் 13, 2025 05:58 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் டில்லி வந்து சீனியர்களை சந்தித்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராக ஊழல் புகார்களை சமர்ப்பித்தனர். தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என, மல்லிகார்ஜுன கார்கேவிடம் வற்புறுத்தினர்.

கார்கேயும், இது குறித்து ராகுலிடம் பேசினாராம். ஆனால் ராகுலோ, 'செல்வப்பெருந்தகை தமிழகத்தில் கட்சியை நன்றாக வளர்த்து வருகிறார்' என கூறி விட்டாராம்.

'தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது. அப்படி ஆட்சி அமைந்தால், அதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு' என, தி.மு.க., தலைவர் கூறியதாக, ராகுலிடம் தெரிவித்தாராம் பெருந்தகை.

இதையடுத்து, 'எத்தனை ஊழல் புகார்கள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். செல்வப்பெருந்தகைதான் தமிழக காங்., தலைவர்' என, கார்கேவிடம் உறுதியாக சொல்லிவிட்டாராம் ராகுல். தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் காங்கிரஸ் இடம் பிடிக்கப் போகிறது என பெருந்தகை கூறியது, ராகுலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.






      Dinamalar
      Follow us