sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்

/

ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்

ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்

ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்


ADDED : மே 11, 2025 12:30 AM

Google News

ADDED : மே 11, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஊறுகாய்க்கு, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யை குறைக்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்' என, தமிழக அரசை உணவுப்பொருள் வியபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வசிக்கும் மக்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் பயன்படுத்துகின்றனர். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் மற்றும் பல்வேறு பழங்கள், காய்கறியில் இருந்து ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.

பழ வகையில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயில், 'சோடியம் பென்சோயேட்' அமில அளவை உயர்த்துவதுடன், ஊறுகாய்க்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என, உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

தமிழகத்தில் ஊறுகாய் தொழிலில், அமைப்பு ரீதியாக, 800 நிறுவனங்கள், அமைப்பு சாராதவையாக 8,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மாதம் சராசரியாக, 50 கோடி ரூபாய்க்கு ஊறுகாய் வியாபாரம் நடக்கிறது. ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்க, சோடியம் பென்சோயேட் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

இது, பழ வகையில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயில், கிலோவுக்கு 250 மி.கி., அளவும், காய்கறி வகையில் இருந்து தயாரிக்கப்படுவதில், 2,000 மி.கி., அளவும் இருக்க விதிகள் உள்ளன. எலுமிச்சை, மாங்காய் போன்றவை பழ வகையில் இடம் பெறுகின்றன. அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் தரத்தை பரிசோதிக்கும் போது, 250 மி.கி.,க்கு மேல் சோடியம் பென்சோயேட் அமிலம் இருந்தால், அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். அந்த அளவு குறைந்தால், ஊறுகாய் கெட்டு விடும்.

எனவே, பழ வகையில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயிலும் கிலோவுக்கு, சோடியம் பென்சோயேட் அமில அளவை, சர்வதேச தர விதிக்கு ஏற்ப 1,000 மி.கி.,யாக உயர்த்தி வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, தமிழக வணிக வரித்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஊறுகாய்க்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us